கொழும்பில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆபத்து
கொழும்பு மற்றும் புறநகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சகம் கவலை வெளியிட்டுள்ளது. சமீபத்திய தகவல்கள் கவலையளிக்கும் போக்கைக் காட்டுகின்றன என அமைச்சர் சரோஜா சாவித்ரி பால்ராஜ் தெரிவித்துள்ளார்.
அதிகமான சிறுமிகளும் இளம் பெண்களும் பல்வேறு பொருட்களுக்கு ஆபத்தான விகிதத்தில் அடிமையாகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தான மருந்துகள்
பொலிஸார், போதைப்பொருள் தடுப்புப் பிரிவுகள் மற்றும் தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு சபையின் தரவுகளுக்கமைய, பெண்கள் மத்தியில் ஐஸ் மெத்தாம்பேட்டமைன் மாத்திரைகள், மதுபானம் மற்றும் சிகரெட் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

கர்ப்பிணிப் பெண்களிடையே போதைப்பொருள் அடிமையாதல் அவர்களின் குழந்தைகளின் அறிவுசார் மற்றும் உடல் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வளர்ந்து வரும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவும், தேவையான ஆதரவு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை வழங்கவும் அமைச்சகம் ஏற்கனவே ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெள்ளைக்கும் பச்சைக்கும் இடையிலான யுத்தம் நிறைவடையுமா..! 57 நிமிடங்கள் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri