உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கர்தினாலுக்கு ஆதரவளிக்க வத்திக்கான் உறுதி
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வத்திக்கான் தனது முழு ஆதரவையும் வழங்கும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் (Francis) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வத்திக்கானில் இருந்து பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்,கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து தாம் கவலையடைவதாகவும் ,அது தொடர்பாக தாம் பிரதிப்பளிப்பதாகவும் ,கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சரியென நினைக்கும் விடயத்தை செய்யுமாறும், தாம் விசுவாசித்து செய்ய வேண்டிய நல்ல விடயத்தை கூறுமாறும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வத்திக்கான் இலங்கையின் செயல்முறையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இலங்கை மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதளுக்கு எதிராக நீதி நிலைநாட்டப்படாமைக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் இலங்கை பிரஜைகள் பங்குபற்றிய இணையதள சந்திப்பின் போது இக்கடிதம் தொடர்பாக பேராயர் விளக்கமளித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்க சர்வதேச தலையீடு கோரி கர்தினால்
விடுத்த அழைப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கடிதம் வத்திக்கானில்
இருந்து அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 16 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam