மக்களுக்கு பேரிடியாக மாறியுள்ள வற் வரி! மற்றுமொரு விலை அதிகரிப்பு
18 வீதத்தால் புதிய பெறுமதி சேர் வரியை நடைமுறைபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த வரியானது, கட்டண உயர்வு விடயத்தில் தனியார் பேருந்து தொழிற்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், கடந்த 25 வருடங்களில் தரமான தனியார் பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வரி விதிக்கப்படவில்லை.ஆனால் சொகுசு பேருந்துகளை இறக்குமதி செய்யும் போது குறிப்பிட்ட வரி விதிக்கப்பட்டது.

டொலரின் பெறுமதி
டொலர் பெறுமதி உயர்வால், 5.5 மில்லியன் முதல் 7 மில்லியன் ரூபாய் வரை இருந்த நிலையான பேருந்தின் விலை, தற்போது 13.7 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.
தனியார் துறையிடம் முன்னர் 20,000 பேருந்துகள் இருந்தன, இப்போது அவை 17,000 ஆக குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி சுமார் பேருந்துகளுக்கு பற்றாக்குறை உள்ளது.
வரி காரணமாக, பேருந்து ஒன்றின் விலை 15.7 மில்லியனாக அதிகரிக்கும். இந்த விலை உயர்வால், பேருந்து உரிமையாளர்களுக்கு பேருந்துகளை இறக்குமதி செய்யும் திறன் இல்லாமல் போகும்.
வற் வரிக்கு இணையாக, உதிரி பாகங்கள், உராய்வு எண்ணெய் மற்றும் சேவைகளின் விலையும் உயரும் எனவே கட்டணங்களையும் அதிகரிக்கவேண்டியேற்படும்.
பேருந்து கட்டணம்
இந்த புதிய வற் வரியில் எரிபொருள் விலையும் சேர்க்கப்பட்டுள்ளதால், எரிபொருள் விலையும் அதிகரிக்கும்.

இந்த அனைத்து உண்மைகளையும் கருத்தில் கொண்டால், பேருந்து கட்டணத்தில் உறுதியான அதிகரிப்பு இருக்கும்,இது சாதாரண போக்குவரத்தை பயன்படுத்தும் மக்களை நேரடியாக பாதிக்கும்.
எனினும் இந்த அனைத்து அதிகரிப்புகளுடனும், இந்த சேவையை தொடர முடியாது, இதன் காரணமாக எதிர்வரும் ஜனவரி முதல் தனியார் பேருந்து சேவையில் புதிய வற் வரிமுறை திட்டவட்டமான வீழ்ச்சியை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 7 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan