கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கு வாசுதேவ நாணயக்கார ஆதரவு-செய்திகளின் தொகுப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்ப வேண்டும், அவர் நிம்மதியாக வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுக்க வேண்டியது எம் அனைவரினதும் பொறுப்பாகும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“நாடு திரும்பும் கோட்டாபய ராஜபக்ச, மீண்டும் அரசியலில் ஈடுபடமாட்டார் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை பாதுகாக்க தவறிய கோட்டாபய உள்ளிட்ட ராஜபக்சர்களின் ஆட்சி கலைக்கப்பட்டதுடன், கோட்டாபய ராஜபக்ச நாட்டிலிருந்து தப்பியோடி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளார்.
அவர் தற்போது இலங்கைக்கு மீண்டும் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் நிம்மதியாக வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுக்க வேண்டியது எம் அனைவரினதும் பொறுப்பாகும்.”என கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,