நாட்டின் சிறுவர்-குழந்தைகளுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் தற்போது நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக சிறுவர் மற்றும் குழந்தைகளிடையே பல்வேறு நோய்கள் பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பில் கொழும்பு - லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளதாவது,
நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சிறுவர் மற்றும் குழந்தைகளிடையே பல்வேறு நோய்கள் ஏற்படுவது இன்றைய நாட்களில் சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது.
வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள்
எனவே, குழந்தைகளுக்கு அதிகளவு திரவ உணவுகள் மற்றும் பானங்களை குடிப்பதற்கு கொடுக்க வேண்டும்.
வறண்ட காலநிலையுடன் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களும் சிறுவர்களிடையே பரவக்கூடும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் வைத்தியசாலையை நாடுமாறும் வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் வடமாகாணத்தில் வெப்பமான காலநிலை நிலவுவதால் சிறுவர்கள் மற்றும் சிறுவர்கள் அதிகளவு குடிப்பதற்கு சுத்தமான நீரை வழங்குமாறு யாழ்.போதனா வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி கே.அருள்மொழி தெரிவித்துள்ளார்.
கிருமித் தொற்றுகள்
மேலும், குறித்த காலப் பகுதியில் குழந்தைகள் சிறுவர்களுக்கு அதிக வியர்வை ஏற்படுபதுடன் உடலில் பருக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இவ்வாறு பருக்கள் ஏற்படும் போது உடலை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் கிருமித் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ள நிலையில் பெற்றோர்கள் சிறுவர்கள் குழந்தைகளின் உடல் சுத்தத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.
தோலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் உரிய வைத்திய ஆலோசனைகளை பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
