காணி அபகரிப்புக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய வந்தாறுமூலை மக்கள்

Police Protest Sri Lanka Batticaloa
By Kumar Oct 20, 2021 11:52 AM GMT
Report

மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் நீண்டகாலமாக விளையாட்டு மைதானமாக பாவிக்கப்பட்டுவந்த காணியை சிலர் அபகரிக்க முற்படுவதாக தெரிவித்து அப்பகுதியில் உள்ள மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வந்தாறுமூலை கிழக்கு தேவாபுரம் என்னும் பகுதியில் உள்ள மக்களே இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விளையாட்டு மைதானத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் வந்தாறுமூலை-தேவாபுரம் வீதியை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிஸாரே சட்டத்தினை உரிய முறையில் நடைமுறைப்படுத்து, விளையாடுவதற்கு மைதானம் தரவேண்டும், ஏறாவூர்பற்று பிரதேச சபையே எமக்கான விளையாட்டு மைதானத்தினை பெற்றுத்தாருங்கள், விளையாட்டு மைதானத்திற்கான நிரந்தர தீர்வினை தாருங்கள், 50 வருட எங்கள் உரிமையினை மீறாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலய மாணவர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் நீண்டகாலமாக குறித்த காணியை விளையாட்டு மைதானமாக பயன்படுத்திவரும் நிலையில் அதனை சிலர் தனியார் காணியென கூறி அடைக்க முற்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 50 வருடத்திற்கு மேலாக குறித்த காணியை தாங்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்திவரும் நிலையில் இன்று தங்களது காணியென கூறி சிலர் அப்பகுதியை வேலியடைக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு விளையாட்டு மைதானங்கள் இல்லாத காரணத்தினால் இந்த மைதானத்தையே பயன்படுத்திவரும் நிலையில் குறித்த விளையாட்டு மைதானத்தினை அபகரிக்கும் செயற்பாடுகளை சிலர் முன்னெடுத்து வருவருதாகவும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறித்த விளையாட்டு மைதானத்தினை புனரமைத்து தருமாறு நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவருகின்ற போதிலும் இதுவரையில் அதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்காத நிலையில் குறித்த பகுதி விளையாட்டுக்கழகங்கள் மற்றும் பாடசாலை என்பன இணைந்தே புனரமைத்து விளையாட்டு நிகழ்வுகளை நடாத்திவருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றர்.

குறித்த விளையாட்டு மைதானத்தினை குறித்த பகுதியில் உள்ள தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள்,சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் உட்பட அரச திணைக்களங்களும் பயன்படுத்திவரும் நிலையிலேயே இந்த விளையாட்டு மைதானத்தினை அபகரிக்க முற்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விளையாட்டு மைதானத்தினை புனரமைத்து அதனை விளையாட்டு மைதானமாக பிரகடனப்படுத்துவதற்கான செயற்பாட்டினை ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை முன்னெடுக்க வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US