மட்டக்களப்பில் பட்டா ரக வாகனம் விபத்து! சாரதி படுகாயம்
மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி அற்புதப் பிள்ளையார் ஆலயத்தின் மதிலில் பட்டா ரக வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது இன்று(04.01.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு பக்கம் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விசாரணை
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், சாரதி சிறுகாயங்களுக்குள்ளான நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தின் போது வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
இந்தநிலையில்,சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.