வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்த உற்சவம்
வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்த உற்சவம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
வல்லிபுரத்து ஆழ்வாருக்கு நேற்று(17) பிற்பகல் 3 மணியிலிருந்து விசேட பூசைகள் இடபெற்றதை தொடர்ந்து வசந்த மண்ட பூசை நடைபெற்றுள்ளன.
சமுத்திர தீர்த்த திருவிழா
இதையடுத்து, 5:14 மணியளவில் வல்லிபுரத்து ஆழ்வார் ஆஞ்சநேயர் முன்னேவர தொடர்ந்து விநாயகரும் அவரை தொடர்ந்து மகாலக்ஷ்மியும் வர வல்லிபுரத்து சக்கரத்து ஆழ்வார் கற்கோவளம் கடற்கரையில் பல்லாயிரம் அடியவர்கள் சூழ சமுத்திர தீர்த்தமாடியுள்ளார்.
கடந்த 02ஆம் திகதியன்று கொடியேற்ற பெருந்திருவிழா ஆரம்பமாகி நேற்று 17ஆம் திகதி திருவிழாவான சமுத்திர தீர்த்த திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் அடியவர்கள் பல்லாயிரம் பேர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது, பல அடியார்கள் தூக்கு காவடி, பால் காவடி, அங்க பிரதிஷ்டை, பால்குடம் போன்ற பல்வேறு நேற்றிக்கடன்களையும் நிறைவேற்றியுள்ளனர்.
இதேவேளை, மக்களுக்கு உரிய சுகாதார மற்றும் அடிப்படை வசதிகளை பருத்தித்துறை பிரதேச சபை, பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளும் வழங்கியிருந்ததுடன் மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் ஒழுங்குகளை பருத்தித்துறை பொலிஸாரும் மேற்கொண்டுள்ளனர்.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 11 மணி நேரம் முன்
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam