வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற பிரதேசங்களில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
யாழ். (Jaffna) வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற பிரதேசங்களில் சட்டவிரோத மண்ணகழ்வு மற்றும் கட்டாக்காலி கால்நடைகளால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகின்றமை அப்பகுதி மக்களிடையே நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சினையாகும்.
இந்நிலையில், குறித்த பிரச்சினை தொடர்பில் பொலிஸார் மற்றும் உரிய திணைக்களங்களிடம் முறைபாடு செய்தும் அவர்கள் அசமந்த போக்காக செயற்படுகின்றார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
"30 வருட யுத்தத்தின் பின்னர் மீள்குடியேறிய நமது கிராமத்தில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இக்கட்டாக்காலி கால்நடைகள் பெரும் சேதத்தை விளைவிக்கின்றன.
மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோதமான மண்ணகழ்வுகள் நடைபெறுகின்றன. இதனை ஆதாரப்பூர்வமாக பொலிஸாரிடம் முறையிட்டும் பொலிஸார் இவ்விடயத்தில் அக்கறையில்லாமல் செயற்படுகின்றனர்” மீள்குடியேற்றப்பட்டவர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு கோரும் அப்பகுதியினர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |