வைபவின் அதிரடி சதத்துடன் ராஜஸ்தான் அபார வெற்றி
ஐபிஎல் தொடரின் 47ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி - குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிகொண்டுள்ளது.
போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
சுப்மன் கில்
அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - வைபவ் ஆகியோர் களமிறங்கினர்.
தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராஜஸ்தான் அணியின் 14 வயது வீரர் வைபவ் 35 பந்தில் சதம் விளாசி ஜபில் வரலாற்றில் தனக்கான இடத்தை பதிவு செய்துள்ளார்.
[YLSQCTX ]
101 ஓட்டங்கள்
அவர் 101 ஓட்டங்களை பெற்ற நிலையில் வெளியேறினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 166 ஓட்டங்களை குவித்தது.
இறுதியில் ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 212 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.