வைபவின் அதிரடி சதத்துடன் ராஜஸ்தான் அபார வெற்றி
ஐபிஎல் தொடரின் 47ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி - குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிகொண்டுள்ளது.
போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
சுப்மன் கில்
அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - வைபவ் ஆகியோர் களமிறங்கினர்.
தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராஜஸ்தான் அணியின் 14 வயது வீரர் வைபவ் 35 பந்தில் சதம் விளாசி ஜபில் வரலாற்றில் தனக்கான இடத்தை பதிவு செய்துள்ளார்.
[YLSQCTX ]
101 ஓட்டங்கள்
அவர் 101 ஓட்டங்களை பெற்ற நிலையில் வெளியேறினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 166 ஓட்டங்களை குவித்தது.

இறுதியில் ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 212 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 10 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri