தடுப்பூசிகள் தொடர்பான ஆய்வில் வெளிவந்த விடயம்
இலங்கையில் பயன்படுத்தப்படும் அஸ்ராசெனகா, பைஸர் மற்றும் சீனோபார்ம் தடுப்பூசிகள் சம்பந்தமாக தனித்தனியாக மூன்று பரிசோதனைகளை நடத்தியதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
அதிகளவான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் தடுப்பூசியை கண்டறிய இந்த பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளரது ஆலோசனைக்கு அமைய இந்த பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்கு அமைய இந்த மூன்று தடுப்பூசிகளும் எல்ஃபா என்ற பலமிக்க வைரஸ் திரிபுக்கு எதிராக செயற்படும் என கண்டறியப்பட்டுள்ளது.
பிரித்தானிய எல்ஃபா என்ற இந்த வைரஸ் திரிபு 50 வீதமான வேகத்தில் பரவக் கூடியது. இதன் மோசமான தன்மை 50 வீதத்திற்கும் அதிகம் எனவும் ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri