இன, மத, மொழி அடிப்படையில் தடுப்பூசி ஏற்றப்படவில்லை! - நாமல்
இன, மத மற்றும் பேசும் மொழியின் அடிப்படையில் கோவிட் தடுப்பூசி ஏற்றப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பைசர் தடுப்பூ ஏற்றப்படுவது குறித்து விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் அதற்கு பதிலளித்துள்ளார். அவர் ஊடகங்களிடம் கூறுகையில்,
தடுப்பூசி ஏற்றப்படும் மாவட்டம், தடுப்பூசிகளின் எண்ணிக்கை, எந்த வகை தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும் என்பது குறித்து சுகாதார அமைச்சே தீர்மானிக்கும். கடந்த காலங்களில் மன்னார், கண்டி போன்ற இடங்களில் இந்த குற்றம் சுமத்தப்படும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
கடந்த காலங்களில் இந்த தடுப்பூசி ஏற்றுகை பற்றி பேசப்படவில்லை.
மாவட்டத்தைப் பார்த்து தடுப்பூசி ஏற்றப்படுவதில்லை, சுகாதார அமைச்சின் வழிமுறைகளுக்கு அமைய தடுப்பூசி ஏற்றப்படுகின்றது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 1 மணி நேரம் முன்

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
