தடுப்பூசி வழங்கல் செயற்திட்டம் குறித்து வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தரின் அறிவிப்பு
30 வயதிற்கு உட்பட்ட அனைத்து பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான கோவிட் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுகாதார அமைச்சுடன் இணைந்து 30 வயதிற்கு உட்பட்ட அனைத்து பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கான கோவிட் நோய் எதிர்ப்பு தடுப்பூசி ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
எனவே வவுனியா மாவட்டத்தில் வாழும் அனைத்து பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் மாணவர்கள், அந்நிறுவனங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 12ஆம் திகதி காலை 10 மணியிலிருந்து மாலை 3 மணிவரை பூங்கா வீதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தில் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கும், பதிவுகளை மேற்கொள்வதற்கும் கீழ் குறிப்பிடப்பட்ட தொலைபேசி இலக்கத்துடன் அல்லது மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- தொலைபேசி - 024 222 4674
- மின்னஞ்சல் - umo@vau.ac.lk என தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
