தடுப்பூசியினால் பாரியளவு பக்க விளைவுகள் ஏற்படவில்லை: சுகாதார அமைச்சு
தடுப்பூசியினால் பாரியளவு பக்க விளைவுகள் எதுவும் இதுவரையில் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
காய்ச்சல், தசைவலி உள்ளிட்ட பொதுவாக தடுப்பூசி ஏற்றல்களின் போது ஏற்படக்கூடிய சில பக்க விளைவுகளைத் தவிர பாரதூரமான பிரச்சினைகள் எதுவும் பதிவாகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே பொதுமக்கள் தடுப்பூசி தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்பொழுது சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் படைவீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தடுப்பூசி விரைவில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் வரையில் சுமார் 59000 பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

1000 கிமீ தூரத்தை அடையும் சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை News Lankasri
