முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பகுதியில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு, பாலிநகர் பகுதியில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பல பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பாலிநகர் பாடாசலையிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
அதிகளவான பிரதேச மக்கள் கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பாலிநகர் பகுதியில் இன்றைய தினம் தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் அதே வேளை நாளைய தினம் ஐயன்கன்குளம் அ.த.க.பாடசாலையிலும் தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.