இலங்கையின் மேலும் மூன்று மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் தடுப்பூசி செலுத்தும் பணிகள்
இலங்கையின் மேல் மாகாணத்தில் தற்போது நடைபெற்று வரும் கோவிட் தடுப்பூசி செலுத்தும் இயக்கம் கண்டி, குருநாகல் மற்றும் இரத்னபுரி போன்ற மேலும் மூன்று மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இன்று தெரிவித்தார்.
இதுவரை 1.1 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இந்தநிலையில் சுமார் 13 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.
தடுப்பூசி இயக்கம் மேல் மாகாணத்தில் முடிந்ததும் குறித்த மூன்று மாவட்டங்களுக்கும் திட்டம் செயற்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 2.3 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 40 முதல் 50 வயதிற்குள் 5.3 மில்லியன்
மக்கள் உள்ளனர். 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 3.3 மில்லியனாக
மதிப்பிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாம்.. எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan
