மன்னார் மாவட்டத்தில் மேலும் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை நாளை ஆரம்பம்
மன்னார் மாவட்டத்திற்கு என மேலும் வழங்கப்பட்டுள்ள 22 ஆயிரத்து 230 'பைஸர்' தடுப்பூசிகள் நாளை 30 வயதிற்கு மேற்பட்ட மன்னார் மாவட்டத்தை நிரந்தர வதிவிடமாக கொண்டவர்களுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (13) செவ்வாய்க்கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் கடந்த 5 ஆம் திகதி முதல் கொவிட் தடுப்பூசி வழங்கலின் இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 3 ஆவது கட்டம் இடம் பெற்று வருகின்றது.
2 ஆவது கட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் விநியோகிக்கப்பட்ட 5 ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று திங்கட்கிழமை வரை கிடைக்கப்பெற்ற 20 ஆயிரம் 'பைஸர்' தடுப்பூசிகளில் 19 ஆயிரத்து 500 வரையிலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது.
செப்டெம்பர் மாதம் நாட்டை முழுமையாகத் திறக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் சிந்தனையின் அடிப்படையில் இந்திய மீனவர்களுடன் தொடர்புபடுகின்ற மன்னார் மீனவர்களினால் ஏற்படக்கூடிய கோவிட் அச்ச நிலையை நீக்குவதற்காக மன்னார் மாவட்டத்திற்கு விசேடமாகக் குறித்த தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டது.
மேலும் நேற்று திங்கட்கிழமை(12) இரவு எமக்கு மேலும் 22 ஆயிரத்து 230 பைஸர் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுக் கிடைக்கப்பெற்றுள்ளது. இவற்றினுடைய விநியோகம் நாளை புதன் கிழமை (14) முதல் ஆரம்பமாகும்.
குறித்த தடுப்பூசிகள் மன்னார் மாவட்டத்தில் 5 அல்லது 6 நிலையங்களில் ஒவ்வொரு நாளும் வழங்கப்படும். இதன் போது 30 வயதிற்கு மேற்பட்ட மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நிரந்தர வதிவுரிமை பெற்ற அனைவரும் எந்த நிலையத்திலும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
2 ஆம், 3 ஆம் நிலைய கடந்த கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் 1 வயதிலும் குறைந்த குழந்தைகளைக் கொண்டுள்ள தாய்மார்களுக்குத் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வாரத்தில் இடம் பெறும்.
இவர்கள் பொது மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்குச் சென்று தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளத் தேவையில்லை. இவர்களுக்கு விசேட விதமாக வேறு நிலையங்களில் எதிர்வரும் வாரம் வழங்கப்படும். இதுவரை மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 899 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 882 பேர் இந்த வருடம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் தற்போது வரை 90 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
