ஆட்பதிவுத் திணைக்களம் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!
டிஜிட்டல் அடையாள அட்டைகளைப் பதிவு செய்வதாகக் கூறி, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி தனிப்பட்ட தகவல்களைப் பெற்று நிதி மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அவசர அழைப்பு இலக்கத்தை ஒத்த தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் பொதுமக்களைத் தொடர்புகொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் அடையாள அட்டைகள் அல்லது இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளுக்கான (e-NIC) பதிவுகளை மேற்கொள்வதாகக் கூறி இந்த மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரிகள் எனப் போலியாகக் கூறிக்கொண்டு, மோசடி செய்பவர்கள் பின்வரும் தொலைபேசி எண்களைப் பயன்படுத்துவதாக திணைக்களம் அடையாளம் காட்டியுள்ளது:
• +94 11 5226126
• 011 5226126
• 0771167739
• 0742756098
மேலும், இந்த மோசடியின் பின்னணியில் உள்ளவர்கள் அரச இலச்சினையைப் பயன்படுத்தி ஒரு மொபைல் செயலியை உருவாக்கியுள்ளனர்.
டிஜிட்டல் அடையாள அட்டைப் பதிவுக்குத் தேவை எனக் கூறி, இந்த செயலி ஊடாகப் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் கோரி வருகின்றனர்.
அத்துடன், திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள "https://drpgov-lk[.]com" என்ற போலி இணையத்தளம் ஊடாகவும் தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் என பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அடையாளம் தெரியாத அழைப்பாளர்கள் அல்லது திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் போலி இணையத்தளங்களுடன் தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
டிஜிட்டல் அடையாள அட்டைகள் அல்லது இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளுக்கான (e-NIC) எந்தவொரு பதிவு நடவடிக்கைகளும் தற்போது திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவில்லை என்பதை ஆட்பதிவுத் திணைக்களம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.
எனவே, இவ்வாறான மோசடி நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri