நுவரெலியா மாவட்டத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
நுவரெலியா மாவட்டத்தில் மிக வேகமாக பரவிவரும் கோவிட் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகள் ஒரு சில பொதுச் சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் - 19 தடுப்புக்கான தடுப்பூசி ஏற்றும் பணி இன்று ஆரம்பமாகியுள்ளது.
சீன தயாரிப்பான சினோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸே இன்று முதல் இவர்களுக்கு ஏற்றப்படுகின்றது.
பாடசாலைகளிலும், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களிலும் ஏனைய சில நிலையங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில், 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சைனோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தும் பணிகள் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிகளவிலான இளைஞர்களும், யுவதிகளும் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.






எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
