ஊவா மாகாண சபையை முற்றுகையிட்ட பட்டதாரி இளைஞர் - யுவதிகள்
பல்கலைக்கழக கற்கைநெறியை நிறைவு செய்து உரிய தொழில் வாய்ப்பு கிடைக்கபெறாமையை வலியுறுத்தி ஊவா மாகாண பட்டதாரி இளைஞர் யுவதிகள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் ஊவா மாகாண பட்டதாரி இளைஞர் யுவதிகள் இன்று (18) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு அழுத்தம்
பல்கலைக்கழக கற்கைநெறியை நிறைவு செய்து பட்டத்தாரிகளாக வெளியேறி நான்காண்டுகள் கடந்த நிலையில் தமக்கான தொழில்வாய்ப்புகளை வழங்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், உரிய அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |