அமெரிக்க டொலரின் பெறுமதி 500 ரூபாவாக உயருமென கணிப்பு: இன்று பதிவாகியுள்ள நிலவரம்
2022ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 360 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும், அது 450 - 500 ரூபாவாக உயரும் என கணிக்கப்பட்டதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ரூபாவின் பெறுமதியின் பலன் படிப்படியாக மக்களுக்கு கிடைக்கும். ரூபா பெறுமதி வலுவடைந்தமையினால், கடனை திருப்பிச் செலுத்தும் சுமை குறைவடைந்தமையும் இங்கு முக்கியமானது.
சந்தை தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் மாற்று விகிதங்கள் தீர்மானிக்கப்படுகின்றன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
அமெரிக்க டொலரின் பெறுமதி
2022ஆம் ஆண்டில், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி உத்தியோகபூர்வமாக 360 ரூபாவாக அதிகரித்துள்ளது. அது 450 - 500 ரூபாவாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய நிலவரப்படி அந்த விகிதம் 300 என்ற அளவில் பேணப்பட்டு வருகிறது.
மேக்ரோ பொருளாதார சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை உணர்ந்து அரசாங்கம் மேற்கொண்ட பொருளாதார ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகள் இதுவரை வெற்றியடைந்துள்ளது. அதன் விளைவாக நாடு புதிய அபிவிருத்திப் பாதையில் பயணிக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
