அமெரிக்க டொலரின் பெறுமதி 500 ரூபாவாக உயருமென கணிப்பு: இன்று பதிவாகியுள்ள நிலவரம்
2022ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 360 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும், அது 450 - 500 ரூபாவாக உயரும் என கணிக்கப்பட்டதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ரூபாவின் பெறுமதியின் பலன் படிப்படியாக மக்களுக்கு கிடைக்கும். ரூபா பெறுமதி வலுவடைந்தமையினால், கடனை திருப்பிச் செலுத்தும் சுமை குறைவடைந்தமையும் இங்கு முக்கியமானது.
சந்தை தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் மாற்று விகிதங்கள் தீர்மானிக்கப்படுகின்றன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
அமெரிக்க டொலரின் பெறுமதி
2022ஆம் ஆண்டில், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி உத்தியோகபூர்வமாக 360 ரூபாவாக அதிகரித்துள்ளது. அது 450 - 500 ரூபாவாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய நிலவரப்படி அந்த விகிதம் 300 என்ற அளவில் பேணப்பட்டு வருகிறது.
மேக்ரோ பொருளாதார சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை உணர்ந்து அரசாங்கம் மேற்கொண்ட பொருளாதார ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகள் இதுவரை வெற்றியடைந்துள்ளது. அதன் விளைவாக நாடு புதிய அபிவிருத்திப் பாதையில் பயணிக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri

காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான் Cineulagam

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

அந்த பிரச்சனையால் 15 ஆண்டுகள் காத்திருந்து அவரை திருமணம் செய்தேன்... கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக் Cineulagam
