டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி: பொருட்களின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெறும் போதும் இறக்குமதியாளர்கள் அதன் பலனை நுகர்வோருக்கு வழங்குவதில்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இலாபத்தை இலக்கு வைத்து அவர்கள் விற்பனை நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.
இதற்கமைய இந்த வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 5.6 சதவீதத்தால் வலுப்பெற்றுள்ளது.
தற்போது நாட்டின் வணிக வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 305 ரூபா 64 சதமாக பதிவாகியுள்ள நிலையில், அதன் கொள்முதல் விலை 300 ரூபா 60 சதமாகவும் மற்றும் விற்பனை விலை 310 ரூபா 20 சதமாகவும் காணப்படுகிறது.
அதன்படி கடந்த 2023ஆம் ஆண்டு அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 12.1 சதவீதமாகவும், இந்த வருடத்தின் மூன்று மாதங்களில் ரூபாயின் பெறுமதி 5.6 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
மக்கள் கூறும் விடயம்
எனினும் ரூபாவின் பெறுமதி அதிகரிப்பின் பயனை தம்மால் அனுபவிக்க முடியவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மக்கள் கூறுகையில், கடந்த காலங்களில் அதிகரிக்கப்பட்ட அளவுகளில் தற்போது பொருட்களின் விலைகள் குறைகின்றதா என பார்த்தால் அது சந்தேகமே. பாதணிகள் கூட ஆயிரம் ரூபாவிற்கு கொள்வனவு செய்த காலம் உள்ளது.
எனினும் தற்போது அது 3500 ரூபாவாக மாறியுள்ளது. எமது சம்பளத்துடன் இந்த விலைகளை ஒப்பிட்டு பார்க்கும் போது மாதாந்தம் வாழ்க்கையை நடத்திச் செல்வது கடினமாக உள்ளது.
மக்கள் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு ஓடுவது இதனால் தான் என குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri
