அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி
அமெரிக்க பல்பொருள் அங்காடியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 6பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா வர்ஜீனியாவில் உள்ள வொல்மாட் பல்பொருள் அங்காடி ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிதாரி

பெயர் குறிப்பிடப்படாத துப்பாக்கிதாரி, சேசபீக்கில் உள்ள கிளையில் சக ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.
பின்னர் துப்பாக்கிதாரி தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,
இத் தாக்குதல் மேற்கொண்டமைக்கான நோக்கம் இன்னும் தெரியவரவில்லை
துப்பாக்கி கலாசாரம்

அண்மையில் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள LGBT இரவு விடுதியில் துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri
விவாகரத்திற்கு ஓகே சொன்ன ரோஹினி, ஆனால் மனோஜிற்கு அவர் வைத்த செக்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri