ஈரான் மீதான அமெரிக்காவின் அதிரடித் தாக்குதல் : நெதன்யாகு வெளியிட்ட தகவல்
ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
"வாழ்த்துக்கள், ஜனாதிபதி ட்ரம்ப். அமெரிக்காவின் வலிமையால் ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைக்கும் உங்கள் துணிச்சலான முடிவு வரலாற்றை மாற்றும்" என்று தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கின் அமைதியான எதிர்காலத்திற்கு
ட்ரம்பின் தலைமை மத்திய கிழக்கின் அமைதியான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் வரலாற்றின் ஒரு மையப்புள்ளியை உருவாக்கியுள்ளார் என்று கூறிய நெதன்யாகு தாக்குதல் முடிந்தவுடன் ட்ரம்பிடம் இருந்து தனக்கு உடனடியாக அழைப்பு வந்ததாக தெரிவித்துள்ளார்.
President Trump and I often say: ‘Peace through strength.’
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) June 22, 2025
First comes strength, then comes peace.
And tonight, @realDonaldTrump and the United States acted with a lot of strength. pic.twitter.com/7lTWCZkgw7
ஒபரேஷன் ரைசிங் லயன், இஸ்ரேல் உண்மையிலேயே அற்புதமான காரியங்களைச் செய்துள்ளது. ஆனால் ஈரானின் அணுசக்தி வசதிகளுக்கு எதிரான இன்றைய நடவடிக்கையில், அமெரிக்க உண்மையிலேயே நிகரற்றதாக இருந்துள்ளது.
உவகில் வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அது செய்துள்ளது என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தாக்குதலில் அமெரிக்கா ஈரானின் ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்னுடன் காதல் - வருங்கால மருமகளை திருமணம் செய்யும் மாமனார் News Lankasri
