இலங்கையில் நில அதிர்வு அளவீட்டு கருவியைக் கொண்டு உளவு பார்க்கிறதா அமெரிக்கா
இலங்கையில் நில அதிர்வு அளவீட்டு கருவியைக் கொண்டு அமெரிக்கா உளவு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகத்தினால் பல்லேகல நில அதிர்வு மையத்தில் நிறுவப்பட்டுள்ள அளவீட்டுக் கருவி இந்தியாவையும், பாகிஸ்தானையும் உளவு பார்க்கவே நிறுவப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் (வரைபடப்பிரிவு) அஜித் பிரேமி தெற்கு ஊடகமொன்றுக்கு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானும், இந்தியாவும் அணுவாயுத பரிசோதனைகளை மேற்கொள்கின்றதா என்பது குறித்து கண்காணிக்கவே இந்த கருவி நிறுவப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
2000ஆம் ஆண்டு முதல் இயங்கிய இந்த நிலையம் 2004ஆம் ஆண்டு சுனாமி ஏற்படும் வரையில் தரவுகள் எதனையும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam
பிரம்மாண்டமான விஷுவல்ஸ்.. சிவராத்திரி அன்று வெளிவந்த நாகபந்தம் படத்தின் மிரட்டலான டிரைலர்.. Cineulagam
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri