ட்ரம்ப் அதிரடியாக கைப்பற்றிய கப்பல்.. சர்வதேசத்தில் வலுக்கும் போர் பதற்றம்
வெனிசுலா கடற்கரையில், தடைசெய்யப்பட்ட எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளதுடன் வாஷிங்டன் மற்றும் கராகஸ் இடையே பதற்றங்களை கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரம்ப் இது குறித்து தெரிவிக்கையில், "வெனிசுலா கடற்கரையில் ஒரு கப்பலை நாங்கள் கைப்பற்றியுள்ளோம், பெரிய எண்ணெய் தாங்கி கப்பல், மிகப் பெரியது, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரியது” என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ச்சியாக, வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றார்.
முதல் நடவடிக்கை
இந்நிலையில், வெனிசுலாவுக்கு எதிராக ட்ரம்ப் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் பதற்றத்தை அதிகரித்து வருகின்றன.

இதற்கிடையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக, வெனிசுலா அரசாங்கம் ஒரு அறிக்கையில் அமெரிக்காவை "அப்பட்டமான திருட்டு" என்று குற்றம் சாட்டியுள்ளதுடன் இந்த பறிமுதல் "சர்வதேச கடற்கொள்ளையர் செயல்" என்று சாடியுள்ளது.
சர்வதேச அமைப்புகளுக்கு முன்பாக இந்த சம்பவத்தை கண்டிப்பதாக வெனிசுலா அறிவித்துள்ளது. வெனிசுலாவில் அமெரிக்க இராணுவத் தலையீட்டிற்கான சாத்தியக்கூறுகளை ட்ரம்ப் பலமுறை சுட்டிக்காட்டி வருகின்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள அமெரிக்கத் தடைகளுக்கு மத்தியில் வெனிசுலா எண்ணெய் சரக்குக் கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட முதல் நடவடிக்கை இதுவாகும்.
மேலும், பிராந்தியத்தில் பாரிய இராணுவக் கட்டமைப்பை ஏற்படுத்த உத்தரவிட்டதிலிருந்து வெனிசுலா தொடர்பான தாங்கிக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் எடுத்த முதல் நடவடிக்கை இதுவாகும்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 20 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam