ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் தீர்மானம்! - இலங்கை கடும் எதிர்ப்பு
அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம், தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகளால் தாக்கப்பட்ட ஒன்றாகும் என இலங்கை அறிவித்துள்ளது.
அத்துடன், குறித்த தீர்மானத்தினை எதிர்ப்பதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18ம் திகதி அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இலங்கையின் வடக்கு - கிழக்கு தமிழர்களின் தாயக பூமி தொடர்பாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், “குறித்த தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடுமையாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
குறித்த தீர்மானத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இருப்பதுடன், ஆதாரமற்ற மற்றும் அப்பட்டமான பொய்கள் தீர்மானத்தின் நோக்கத்தில் கடுமையான சந்தேகங்களை எழுப்புகின்றன” என்று வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் தவறான, பக்கச்சார்பான மற்றும் ஒருதலைப்பட்ச தன்மையைக் கருத்தில் கொண்டு, இது வெறும் மனித உரிமைத் தீர்மானம் அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளலாம்.
அமெரிக்க காங்கிரசில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகளின் கூட்டணியால் செல்வாக்கு செலுத்தியதாகத் தெரிகிறது” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை அரசு தனது பதிலை வாஷிங்டன், டி.சி.யில் உள்ள இலங்கை தூதரகம் மூலம் வெளியுறவுக் குழு, ஆசியா தொடர்பான துணைக்குழு மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு சமர்ப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
You My Like This Video
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri