உக்ரைன் ஜனாதிபதியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) இன்று முதல் முறையாக உக்ரைன் ஜனாதிபதியிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா ஏற்கனவே உக்ரைனுக்காக அனுமதித்த இராணுவ உதவி இன்னும் உக்ரைனுக்கு அனுப்பப்படாமை தொடர்பிலேயே பைடன், செலென்ஸ்கியிடம் மன்னிப்பைக் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியை, பைடன் பாரிஸில் சந்தித்தபோதே மன்னிப்பை கோரியதாக கூறப்படுகிறது.
இராணுவ உதவிப் பொதி
உக்ரைனுக்கான 61 பில்லியன் டொலர் இராணுவ உதவிப் பொதியை காங்கிரஸில் பழமைவாத குடியரசுக் கட்சியினர் ஆறு மாதங்களாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இதற்காக தாம் மன்னிப்பை கோருவதாக பைடன் கூறியுள்ளார். இருப்பினும், அமெரிக்க மக்கள் தொடர்ந்தும் உக்ரைனுக்கு ஆதரவாகவே செயற்படுகிறார்கள் எனவும் நாங்கள் தொடர்ந்தும் முழுமையாக உங்களுடன் இருக்கிறோம் என்றும் பைடன் செலென்ஸ்கியிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
