உக்ரைன் ஜனாதிபதியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) இன்று முதல் முறையாக உக்ரைன் ஜனாதிபதியிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா ஏற்கனவே உக்ரைனுக்காக அனுமதித்த இராணுவ உதவி இன்னும் உக்ரைனுக்கு அனுப்பப்படாமை தொடர்பிலேயே பைடன், செலென்ஸ்கியிடம் மன்னிப்பைக் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியை, பைடன் பாரிஸில் சந்தித்தபோதே மன்னிப்பை கோரியதாக கூறப்படுகிறது.
இராணுவ உதவிப் பொதி
உக்ரைனுக்கான 61 பில்லியன் டொலர் இராணுவ உதவிப் பொதியை காங்கிரஸில் பழமைவாத குடியரசுக் கட்சியினர் ஆறு மாதங்களாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இதற்காக தாம் மன்னிப்பை கோருவதாக பைடன் கூறியுள்ளார். இருப்பினும், அமெரிக்க மக்கள் தொடர்ந்தும் உக்ரைனுக்கு ஆதரவாகவே செயற்படுகிறார்கள் எனவும் நாங்கள் தொடர்ந்தும் முழுமையாக உங்களுடன் இருக்கிறோம் என்றும் பைடன் செலென்ஸ்கியிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam
