நேட்டோ பதிலடி கொடுக்காது என தவறாக நினைத்த புடின்! அமெரிக்க ஜனாதிபதி பகிரங்க எச்சரிக்கை (Photos)
மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நினைத்துவிட்டார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
அமெரிக்கா மற்றும் எங்களுடைய கூட்டாளி நாடுகள் நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் முழு படைபலத்துடன், எங்களுடைய ஒன்று சேர்ந்த பலத்தால் பாதுகாப்போம்.
உக்ரைன் மக்கள் தைரியத்துடன் சண்டையிட்டு வருகிறார்கள். சண்டையில் புடின் ஆதாயம் அடையலாம். ஆனால், நீண்ட காலத்திற்கு அவர் அதற்கான அதிகப்படியான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.
உக்ரைன் மக்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது. முன்னதாக, சர்வாதிகாரிகள் அவர்கள் செய்த ஆக்கிரமிப்பு செயலுக்கு விலை கொடுக்காத போது அவர்கள் மேலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனர் என்பதை நமது வரலாற்றின் மூலம் நாம் அறிந்துள்ளோம்.
அவர்கள் தொடர்ந்து முன்னேறி கொண்டே சென்று அமெரிக்கா மற்றும் உலகிற்கு அதிக செலவு, அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடுகின்றனர்.
புடினின் போர் திட்டமிடப்பட்ட மற்றும் தூண்டப்படாதது. ராஜாங்க ரீதியிலான முயற்சிகளை புடின் நிராகரித்துவிட்டார். மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என புதின் நினைத்துவிட்டார். புதின் தவறாக நினைத்துவிட்டார் என எச்சரித்துள்ளார்.
உக்ரைனுடனான தெற்கு எல்லையில் “பெலாரஸ்” தனது படைகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு நாட்களில் இது பத்து மடங்கு வரை உயரும் என்று ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ அறிவித்தார்.
இந்த நடவடிக்கையானது பெலாரஸுக்கு எதிரான எந்தவொரு ஆத்திரமூட்டல் மற்றும் இராணுவ நடவடிக்கையையும் நிறுத்துவதற்கு மிகவும் பயிற்றுவிக்கப்பட்ட படை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். |
உக்ரைனில் நடந்த சண்டையில், தெற்கு நகரமான Kherson - 25 இலட்சம் மக்கள் தொகையுடன் - ரஷ்ய துருப்புக்கள் கைகளில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
அங்கு இடம்பெற்ற தாக்குல்களின்போது 200 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பலர் பொதுமக்கள் என்றும் உள்ளூர் சபையின் உறுப்பினர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். |
உலகின் மிகப்பெரிய வான்வெளி உற்பத்தியாளர்களில் ஒன்றான “போயிங்” அதன் ரஷ்ய பங்காளிகளுடனான உறவுகளை துண்டித்துள்ளது.
இதன்படி அமெரிக்க விமானம் தயாரிப்பாளரான போயிங் இனி ரஷ்ய விமானங்களுக்கு தொழிநுட்ப ஆதரவு அல்லது பராமரிப்பு அல்லது பாகங்களை வழங்கமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. |
உக்ரேனிய சுதந்திர தகவல் நிறுவனம் மற்றும் உக்ரேனிய இராணுவ அதிகாரிகளின் கூற்றுப்படி, ரஷ்ய “பராதுருப்புக்கள்” வடகிழக்கு நகரமான கார்கிவில் தரையிறங்கி நகரின் இராணுவ மருத்துவமனைகளில் ஒன்றைத் தாக்கியுள்ளது. எனினும் இதனை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என்று பிபிசி கூறுகிறது. செவ்வாய்க்கிழமை கார்கிவில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குடியிருப்புகள் மீது பீரங்கித் தாக்குதல்கள் உக்ரேனிய போராட்டத்தை பலவீனப்படுத்தும் ரஷ்யாவின் முயற்சியாக இருக்கலாம் என்று போர் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். |

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
