வளைகுடா முழுவதும் ஏவுகணை தாக்குதல்கள்.. உயிர் தியாகம் குறித்த ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு
ஈரான் மக்களை தங்கள் அரசாங்கத்தை கைப்பற்றுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ள காணொளி செய்தி சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“நாங்கள் எங்கள் பணியை முடித்ததும், உங்கள் அரசாங்கத்தை நீங்கள் கைப்பற்றுங்கள்.
அது உங்களுடையதாக மாறும். தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய வாய்ப்பு இதுவாகும்” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்நிலையில் உயிர் தியாகங்களுக்கு தயாராக இருங்கள் என அமெரிக்கர்களுக்கு அவர் விடுத்துள்ள அழைப்பும் இந்த தாக்குதலின் தீவிரத்தை எடுத்துக்காட்டியுள்ளது.
ஈரானிடம் உள்ள ஆயுதங்களின் தீவிரத்தை சர்வதேச நாடுகள் அறிந்துள்ள போதும் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒரு மையத்தில் நின்று தனது நகர்வுகளை எவ்வாறு கொண்டுசெல்ல போகின்றது என்பதை விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...