இன்றுடன் முடிவுக்கு வரும் அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம்: மீண்டும் போர் வெடிக்குமா..

Donald Trump United States of America Iran Strait of Hormuz
By Shadhu Shanker Aug 17, 2026 12:18 PM GMT
Report

மத்திய கிழக்கில் நீடித்த போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மேற்கொள்ளப்பட்ட 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இன்றுடன் (17) முடிவுக்கு வருகின்றது.

ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்து இரு தரப்பிலிருந்தும் இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. இந்த ஒப்பந்தத்தின் கீழ், 60 நாட்களுக்குள் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்காக அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை

ஆனால், கடந்த சில வாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளதால், பேச்சுவார்த்தைகள் தொடருமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து ஈரான் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இன்றுடன் முடிவுக்கு வரும் அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம்: மீண்டும் போர் வெடிக்குமா.. | Us Iran Ceasefire Pact Expires Today

இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தர்கள் மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டு வந்தாலும், அதை பேச்சுவார்த்தை எனக் கருத முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்கா MoU-வை மீறியதாகவும், அதன் காரணமாகவே மீண்டும் மோதல்கள் ஏற்பட்டதாகவும் அராக்சி குற்றம்சாட்டியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் பேச்சுவார்த்தை இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கான புதிய பாதையை உருவாக்க ஈரானும் ஓமானும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தற்காலிக பாதை ஒன்றை உருவாக்கி வருவதாகவும், பின்னர் அது நிரந்தர பாதையாக மாற்றப்படும் என்றும் அராக்சி தெரிவித்துள்ளார்.

இறுதி ஒப்பந்தம்

ஆனால், நீரிணை மீண்டும் முழுமையாக திறக்கப்படுவது அமெரிக்கா சில நிபந்தனைகளை நிறைவேற்றுவதைப் பொறுத்தே இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

மறுபுறம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீர்வழியை அமெரிக்கா விரைவில் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் என தெரிவித்துள்ளார்.

MoU-வில் என்ன இருந்தது? ஜூன் 17ஆம் திகதி ட்ரம்பும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இன்றுடன் முடிவுக்கு வரும் அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம்: மீண்டும் போர் வெடிக்குமா.. | Us Iran Ceasefire Pact Expires Today

மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், வளைகுடா பகுதியில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்தும், குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன.

ஒப்பந்தத்தின் கீழ், இரு தரப்பும் அனைத்து முனைகளிலும், குறிப்பாக லெபனானிலும், இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இறுதி ஒப்பந்தம் அதிகபட்சம் 60 நாட்களுக்குள் எட்டப்பட வேண்டும் என்றும், இரு தரப்பும் சம்மதித்தால் அந்த காலக்கெடு நீட்டிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.

அமெரிக்காவுக்கான நிபந்தனைகள் இறுதி ஒப்பந்தம் எட்டப்பட்ட 30 நாட்களுக்குள் அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

ஹோர்முஸ் நீரிணை

மேலும், ஈரானின் மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக்காக குறைந்தது 300 பில்லியன் டொலர் மதிப்பிலான திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குதல், ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்குதல் மற்றும் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் நிதியை மீண்டும் அணுகுவதற்கு வழிவகுத்தல் ஆகியவையும் அமெரிக்காவின் பொறுப்புகளாக குறிப்பிடப்பட்டிருந்தன.

ஈரானுக்கான நிபந்தனைகள் ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கடல் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும். மேலும், 60 நாட்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி கப்பல்கள் அந்த நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

அத்துடன், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கவோ அல்லது பெற்றுக்கொள்ளவோ மாட்டாது என்றும், தற்போதைய நிலையைத் தொடரும் என்றும் உறுதியளித்திருந்தது.

இன்றுடன் முடிவுக்கு வரும் அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம்: மீண்டும் போர் வெடிக்குமா.. | Us Iran Ceasefire Pact Expires Today

ஒப்பந்தம் ஏன் தோல்வியடைந்தது? ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாளிலேயே அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

குறிப்பாக, இது வெறும் போர் நிறுத்த ஒப்பந்தமா அல்லது நீண்டகால அமைதிக்கான ஒப்பந்தமா என்பதில் இரு தரப்புக்கும் மாறுபட்ட கருத்துகள் இருந்தன. ஒப்பந்தம் கையெழுத்தாகி இரண்டு வாரங்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக மீண்டும் மோதல்கள் ஏற்பட்டன.

இரு தரப்பும் ஒருவரை ஒருவர் ஒப்பந்தத்தை மீறியதாகக் குற்றம்சாட்டின. ஜூலை 7ஆம் திகதி, அமெரிக்கா தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், இந்த ஒப்பந்தம் “முடிவடைந்துவிட்டது” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்கா புதிய தாக்குதல்

இதற்கு பதிலளித்த ஈரான், அமெரிக்கா தனது ஒப்பந்தப் பொறுப்புகளை மீறியதுடன் அவற்றை நிறுத்திவிட்டதாகவும், அதற்கு பதிலாக ஈரானும் தனது பொறுப்புகளை நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தது.

ஜூலை இறுதி முதல் ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள் நடத்தியதாக வெளிப்படையாகத் தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், போர் முடிவுக்கு வந்ததற்கான உறுதியான அறிகுறிகள் இல்லை.

அடுத்து என்ன நடக்கும்? MoU இன்று முடிவடையும் நிலையில், மீண்டும் முழுமையான போர் தொடங்குமா என்பது தெளிவாக இல்லை. இரு தரப்பும் தாங்களே போரில் வெற்றி பெற்றதாகக் கூறுகின்றன. அமெரிக்கா ஈரானுக்கு பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்துவதை தனது முக்கிய உத்தியாகக் கொண்டுள்ளது.

இன்றுடன் முடிவுக்கு வரும் அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம்: மீண்டும் போர் வெடிக்குமா.. | Us Iran Ceasefire Pact Expires Today

மறுபுறம், ஈரான் தாங்கள் போரில் வெற்றி பெற்றதாக தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரும் தலைமை பேச்சுவார்த்தையாளருமான மொஹம்மத் பாகர் காலிபாஃப், அமெரிக்காவும் இஸ்ரேலும் போரின் தொடக்கத்தில் நிர்ணயித்த இலக்குகளை அடையத் தவறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஆரம்ப இலக்குகளில் ஈரானின் முழுமையான சரணடைவு, ஆட்சி மாற்றம், ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பது மற்றும் ஹெஸ்பொல்லா உள்ளிட்ட பிராந்திய குழுக்களுக்கான ஈரானின் ஆதரவை முடிவுக்குக் கொண்டுவருவது ஆகியவை அடங்கியிருந்தன.

இதனால், ஒப்பந்தம் காலாவதியாகும் நிலையில் புதிய பேச்சுவார்த்தைகள் தொடங்குமா அல்லது அமெரிக்கா–ஈரான் மோதல் மீண்டும் தீவிரமடையுமா என்பதே தற்போது சர்வதேச அளவில் முக்கிய கேள்வியாக உள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US