அமெரிக்காவின் அதிரடி தீர்மானத்தால் போர்க்குற்றச்சாட்டிலிருந்து தப்பும் இலங்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதாக அமெரிக்கா எடுத்துள்ள முடிவானது, இலங்கைக்கு மிகவும் நன்மையை ஏற்படுத்தும் என பேராசிரியர் பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 வது அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது இலங்கைக்கு எதிரான முந்தைய தீர்மானத்திற்கு சவால் விடுக்கப்படலாம் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இலங்கை மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டு, கலப்பின நீதிமன்றம் அமைப்பது போன்ற திட்டங்களை அமெரிக்கா முன்வைத்தது. அதனை மேற்குலக நாடுகள் ஆதரிக்கின்றன.
சாதகமான நிலைமை
இந்நிலையில் இந்தத் தீர்மானத்திலிருந்து அமெரிக்கா விலகுவதால் இலங்கைக்கு சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நாம் உருவாக்கும் மனித உரிமைகள் திட்டத்தை நாமே முன்வைக்க முடியும். இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் ஆதரவைப் பெற்றால், இலங்கைக்கு எதிரான முந்தைய திட்டத்தை முறியடிக்க முடியும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri