இலங்கை இராணுவத்தின் ஊடாக அமெரிக்காவின் இரகசிய நடவடிக்கை (VIDEO)
இந்தியாவை பொருத்தமட்டில் மேற்குல நாடுகள் இலங்கையில் கால் பதிப்பதை இந்தியா ஆபத்தாகவே கருதுகின்றது. எனவே இலங்கை இராணுவத்தின் ஊடாக அமெரிக்காவின் இரகசிய நடவடிக்கையால் இந்தியா சிதறிவிடும் என்ற பயத்தில் உள்ளது என பிரித்தானியாவின் வேல்சில் இருக்கக்கூடிய கலாநிதி பிரபாகரன் (அரூஸ்) தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தின் ஊடாக அமெரிக்காவின் இரகசிய நடவடிக்கை,சமூக மட்டத்தில் இராணுவம் தொடர்பில் தொக்கி நிற்கும் கேள்விகள் தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையுடனான அமெரிக்காவின் அனைத்து உடன்படிக்கைகளும் தோல்வியடைந்துள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் நண்பர்கள் எனின் இந்தியாவின் அழுத்தம் மூலம் உடன்படிக்கைகள் வெற்றி பெற்றிருக்க முடியும். நிலைமை அவ்வாறு இல்லை.
சீனாவினை எதிர்க்காத சிங்கள மக்கள் அமெரிக்காவை எதிர்கின்றனர்.இதனை இந்தியா கண்டுக்கொள்ளவில்லை.இந்தியா அக்கறை கொள்ளவில்லை.மறைமுகமாக செயற்பட்டு வருகின்றது.
தமிழ் மக்களின் பிரச்சினையை அனைத்துலக மடட்த்திற்கு கொண்டு சென்றது இந்தியா .இந்தியாவின் பூகோள அரசியலுக்கு இலங்கை தேவை.
அமெரிக்காவின் நகர்வை இந்தியா ஆபத்தாகவே கருதுகின்றது.மேற்குலகம் இலங்கையில் கால் பதித்தால் அல்லது தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயற்பட்டால் இந்தியா என்ற தேசம் சிதறி சிறிய நாடுகளாக மாறிவிடும் என்ற பயம் இந்தியாவிற்கு அச்சம் உள்ளது.
இந்தியாவின் உடைவை மேற்குலகமும்,அமெரிக்காவும் மறைமுகமாக அனுசரனை வழங்கி ஆதரிக்கும் என்ற பயம் இந்தியாவிற்கு உள்ளது. எனவே, சீனாவின் நகர்வை இந்தியா கண்டுக்கொள்ளாமல் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி...
புலம்பெயர் தமிழ் அமைப்புக்குள் ஆழ ஊடுருவிய இலங்கை புலனாய்வாளர்கள்

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
