அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவருடன் இலங்கையின் தொழில்வாண்மையாளர்கள் விசேட சந்திப்பு
அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவரான மகிந்த சமரசிங்க (Mahinda Samarasinghe), இலங்கையின் தொழில்வாண்மையாளர்கள் சிலருடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார் .
குறித்த சந்திப்பானது, அமெரிக்காவின் வொஷிங்டனிலுள்ள டிசியில் (Washington D.C) நடைபெற்றுள்ளது.
இலங்கைத் தொழில்வாண்மையாளர்களான கிஸோக் நவரட்னராஜா, நிரோசினி தனுஜா நுகவெல மற்றும் நுசாயிக் ஹுஸ்னி நஜிமுடீன் ஆகியோர், அரசாங்கம் மற்றம் சமூகம் தொடர்பான தொழில்வாண்மை கற்கை நெறியொன்றுக்காக அமெரிக்காவிற்கு (America) விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
கருத்தரங்கு
இதன்போதே மகிந்த சமரசிங்க அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த கருத்தரங்குத் திட்டமானது, அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், இந்த கருத்தரங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்யும் தொழில்வாண்மையாளர்கள் பெறுமதிமிக்க விடயங்களை கற்றுக்கொண்டு நாடு திரும்புவார்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam