தாய்வானுக்கு பைடன் வழங்கிய உறுதி
அமெரிக்கா (US), தாய்வானுக்கு (Taiwan) தனது 571 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உதவியை வழங்குவதை உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், தாய்வானின் பாதுகாப்பு அமைச்சகம் அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதத்திற்கு நன்றி தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான அறிக்கை ஒன்றில், தாய்வானின் ஜலசந்தியில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இருநாட்டின் தரப்பும் தொடர்ந்து நெருக்கமாக செயற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் நகர்வுகள்
இதன்படி, தாய்வானுக்கான பாதுகாப்பு உதவிக்கு ஒப்புதல் வழங்குவதாக கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அதேநேரம், அதன் தீவுக்கும் சுமார் 265 மில்லியன் டொலர் மதிப்புள்ள இராணுவ உபகரணங்களை விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகளையும் அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ளார்.
தாய்வானுக்கு எதிரான இராணுவ அழுத்தத்தை சீனா அதிகரித்துள்ளது, இதில் தீவுக்கு அருகிலுள்ள தினசரி இராணுவ நடவடிக்கைகள் மற்றும் இந்த ஆண்டு இரண்டு சுற்று போர் பயிற்சிகளும் அடங்குகின்றன.
தாய்வானைச் சுற்றியுள்ள கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களிலும் மிகப்பெரிய கடற்படைப் படைகளை குவிப்பதாக சீனா அறிவித்திருந்தமையினால் தாய்வான் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
