பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஊரு ஜுவா பலி
பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் மெலேன் மபுலா எனும் ஊரு ஜுவா உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. நவகமுவ பகுதியில் வைத்து குறித்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
27 வயதான குறித்த நபர் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாக புலனாய்வாளர்களால் தேடப்பட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.