யாழ். கார்கில்ஸ் திரையரங்கிற்கு கடந்த இரு வாரங்கள் சென்றவர்களுக்கான அவசர கோரிக்கை!
யாழ்ப்பாணம் மாநகர் கார்கில்ஸ் கட்டடத்தில் உள்ள திரையரங்குக்குக் கடந்த இரண்டு வாரங்கள் திரைப்படம் பார்ப்பதற்கு சென்றவர்களில் கோவிட் - 19 வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளோரைத் தொடர்புகொள்ளுமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளார்.
காய்ச்சல், தொண்டை நோ, தடிமன், தும்மல் போன்ற அறிகுறிகள் உள்ளோர் தாம் வசிக்கும் பிரதேசத்தைச் சேர்ந்த சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அல்லது வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 24 மணிநேர சேவையான 021 2226666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு அவர் கேட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கார்கில்ஸ் கட்டடத் தொகுதியில் உள்ள திரையரங்கில் பணியாற்றும் 7 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றுமுன்தினம் கண்டறியப்பட்டது. அதையடுத்து திரையரங்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அந்தத் திரையரங்குக்கு கடந்த இரண்டு வாரங்களாகச் சென்றவர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதனாலேயே யாழ்ப்பாணம் மாநகர் கார்கில்ஸ் கட்டடத்தில் உள்ள திரையரங்குக்குக் கடந்த இரண்டு வாரங்கள் திரைப்படம் பார்ப்பதற்குச் சென்றவர்களில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளோரைத் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
