தனியார் மற்றும் அரச காணிகளின் உரிமையாளர்களுக்கு அவசர அறிவித்தல்
அபாயகரமான மரங்கள் அமைந்துள்ள தனியார் மற்றும் அரச காணிகளின் உரிமையாளர்களுக்கு இன்று (29) முதல் சட்ட அறிவித்தல் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
"தனியார் காணிகள் மற்றும் அரசு நிறுவன காணிகளில் மரங்கள் விழுவதாக தொடர்ந்தும் முறைப்பாடுகள் வரும் நிலையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சொத்துக்களுக்கு பொறுப்பு கூறும் உரிமை
குறிப்பிட்ட நிலத்தின் உரிமையாளர், பொது நிறுவனம், தனியார் நிறுவனம் அல்லது குடியிருப்பாளர்கள் இருந்தால், அவர்களின் நிலத்தில் உள்ள அனைத்து சொத்துக்களுக்கும் பாதுகாப்பு மற்றும் பொறுப்பு கூறும் உரிமை அவர்களுக்கு உள்ளது.
அதன்படி, தங்களது காணிகளில் உள்ள மரங்கள் பாதுகாப்பற்றதாக இருந்தால், அதை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்த சட்டப்பூர்வ அறிவிப்பினை வெளியிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri
நிம்மதியாக இருக்க கொடைக்கானல் சென்ற ஜனனி தேடிவந்த ஆபத்து... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam