தனியார் மற்றும் அரச காணிகளின் உரிமையாளர்களுக்கு அவசர அறிவித்தல்
அபாயகரமான மரங்கள் அமைந்துள்ள தனியார் மற்றும் அரச காணிகளின் உரிமையாளர்களுக்கு இன்று (29) முதல் சட்ட அறிவித்தல் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
"தனியார் காணிகள் மற்றும் அரசு நிறுவன காணிகளில் மரங்கள் விழுவதாக தொடர்ந்தும் முறைப்பாடுகள் வரும் நிலையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சொத்துக்களுக்கு பொறுப்பு கூறும் உரிமை
குறிப்பிட்ட நிலத்தின் உரிமையாளர், பொது நிறுவனம், தனியார் நிறுவனம் அல்லது குடியிருப்பாளர்கள் இருந்தால், அவர்களின் நிலத்தில் உள்ள அனைத்து சொத்துக்களுக்கும் பாதுகாப்பு மற்றும் பொறுப்பு கூறும் உரிமை அவர்களுக்கு உள்ளது.
அதன்படி, தங்களது காணிகளில் உள்ள மரங்கள் பாதுகாப்பற்றதாக இருந்தால், அதை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்த சட்டப்பூர்வ அறிவிப்பினை வெளியிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
