உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
வருடாந்த வருமான அறிக்கையை உரிய நேரத்தில் சமர்ப்பிக்காதவர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படுமெனவும், செலுத்த வேண்டிய வரியில் 5 வீதம் தண்டப்பணம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான அறிக்கை இறுதி திகதி
மேலும், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் இந்த வருடம் ( 2023) மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான மதிப்பீட்டு வருடத்திற்கான வருமான அறிக்கைகளை வழங்கும் நடவடிக்கை இன்றுடன் (30.11.2023) முடிவடைவதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வருமான அறிக்கையை வழங்காதவர்களிடம் இருந்து 50000 ரூபா தண்டப்பணம் அறவிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri