டெங்கு நோய் பரவுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுகாதார வைத்திய அதிகாரி எச்சரிக்கை (Photos)

Jaffna Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka
By Rusath Aug 01, 2022 08:46 AM GMT
Report

இலங்கையின் பல பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக சுகாதார வைத்திய அதிகாரி சங்கம் எச்சரித்துள்ளது. மேலும் மக்கள் சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்குமாறும் வலியுறுத்தப்படுகிறார்கள். 

இது தொடர்பில் அறிக்கைகள் மூலம்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த ஜுலை 18 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 12 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதுடன் இவ்வாண்டில் மொத்தமாக 901 பேர் டெங்கு நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் எமது மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றமை தரவுகள் மூலம் கணிக்கப்பட்டுள்ளது.

டெங்கு நோயின் தாக்கத்தினை உணர்ந்து பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்படுவதுடன் வீடுகளில் நீர் தேங்கியிருக்கும் இடங்களை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுத்து எமது சுற்றுப்புற சூழலை சுகாதாரமுறையில் பேணுவது எமது கடமையாகும்.

பெறுமதியான மனித உயிரை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றாய் செயற்பட்டு எமது நாட்டில் இருந்து டெங்குவை ஒழிப்பதற்கு ஒவ்வொரு வரும் திடசங்கற்பம் பூண வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.  

யாழ்ப்பாணம்

டெங்கு நுளம்பு பரவும் வகையில் சுற்றுப்புற சூழலை வைத்திருப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வசீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காலநிலை மாற்றம் காரணமாக மழைக்காலம் ஆரம்பமாக உள்ளதனால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்புரையின் கீழ் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வசீர் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர், நுளம்பு கள தடுப்பு பிரிவினர்கள் இணைந்து செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இச்செயற்றிட்டத்தில் கொள்கலன் சேகரிப்பு மற்றும் களபரிசோதனை நடவடிக்கைகள் காரைதீவு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

டெங்கு நுளம்பு பரிசோதனை

இதன்போது எமது அலுவலக பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு களதடுப்பு பிரிவினர்கள் இணைந்து வீடுகளில் டெங்கு பரிசோதனை மேற்கொண்ட போது அதிகமான இடங்களில் நுளம்பு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

டெங்கு நோய் பரவுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுகாதார வைத்திய அதிகாரி எச்சரிக்கை (Photos) | Urgent Action Needed To Eradicate Dengue

எனவே பொதுமக்கள் இரண்டு நாட்களுக்கு மேல் குடம், வாளி மற்றும் நீல நிற பரல்களில் நீரை சேமித்து வைக்க வேண்டாம், ஒவ்வொரு முறையும் நீர் சேமிக்கும் கொள்கலன்களை பூரணமாக கழுவி சுத்தம் செய்த பின்னரே மீண்டும் நீரை சேகரித்தல் வேண்டும்.

ஒவ்வொரு நாளும் உங்கள் கிணறு, நீர் சேமிக்கும் கொள்கலன்கள், மலசலகூட வாளி, சுற்றுப் புறங்களில் நீர் தேங்கும் இடங்களை அவதானியுங்கள்.

டெங்கு நோய் பரவுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுகாதார வைத்திய அதிகாரி எச்சரிக்கை (Photos) | Urgent Action Needed To Eradicate Dengue

மேலும் அநேக வீடுகளின் வீட்டின் உட்பகுதியில் குளிர்சாதன பெட்டியின் பிற்பக்க நீர் தேங்கும் பகுதிகள், சமயலறையின் சிங் (sink) இன் கீழ்பக்க பகுதிகள், கூரையிலிருந்து கசிந்து வரும் மழைநீரை சேகரிக்க வைக்கும் பாத்திரங்கள், குளியலறையில் நீர் சேகரித்துவைக்க பாவிக்கப்படும் வாளிகள், நீர் தேங்கிநிற்கும் பூச்சாடிகள் போன்றவற்றில் அதிகமான நுளம்பு குடம்பிகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

கடுமையான சட்ட நடவடிக்கை

டெங்கு நோய் பரவுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுகாதார வைத்திய அதிகாரி எச்சரிக்கை (Photos) | Urgent Action Needed To Eradicate Dengue

எனவே குறிப்பிட்ட இடங்களில் அதிக கவனம் செலுத்தி நுளம்புகள் பெருக இடமளிக்காமல் சுத்தம் செய்து கொள்ளுமாறும் சுத்தம் செய்ய தவரும் பட்சத்தில் உரிமையாளருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் மனவர்த்ததுடன் தெரிவித்து கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார். 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US