இலங்கையில் பரவும் புதிய வைரஸ்! உடனடியாக வைத்தியரை நாடுமாறு அறிவுறுத்தல்
டெங்கு காய்ச்சலின் புதிய பிறழ்வு வேகமாக பரவி வரும் நிலையில் காய்ச்சல் ஏற்படின் உடனடியாக வைத்தியரை நாடுமாறும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜீ. விஜேசூரிய வலியுறுத்தியுள்ளார்.
இதன் காரணமாக, புதிய வைரஸ் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாக்க சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதிய வைரஸ் பரவலுக்கான அறிகுறிகள்
அத்துடன், பிள்ளைகளுக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் அல்லது காய்ச்சல் ஏற்படுமாயின் உடனடியாக வைத்தியரை நாடுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தொண்டைவலி, காய்ச்சல், இருமல், சளி போன்றவை புதிய வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் வயதானவர்கள் மத்தியில் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
