மதுபானங்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும்: வலியுறுத்தும் உலக சுகாதார அமைப்பு
மதுபானங்கள் மற்றும் இனிப்பு பானங்கள் மீதான வரிகளை அதிகரிக்குமாறு உலக நாடுகளிடம் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
குறித்த வரி அதிகரிப்பினால் ஆரோக்கியமற்ற பொருட்கள் மீதான சராசரி உலகளாவிய வரி விகிதம் குறைவடைவதுடன் ஆரோக்கியமான மக்கள் தொகைக்கு வழிவகுக்கும்.
வரிகளை அதிகரிக்கும் செயற்பாடு
மது அருந்துவதால் ஆண்டுக்கு 26 இலட்சம் மக்கள் இறப்பதுடன் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வதால் 80 இலட்சத்துக்கு அதிகமானோர் இறக்கின்றனர்.
மதுபானங்கள், இனிப்பு பானங்கள் மீதான வரியை நடைமுறைப்படுத்துவது இந்த இறப்புகளின் வீதத்தை குறைக்கும்.
வரி விதிக்கும் செயற்பாட்டினால் குறித்த தயாரிப்புகளின் பயன்பாட்டைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான தயாரிப்புகளை உருவாக்க நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும்.
ஆரோக்கியமற்ற பொருட்களுக்கு வரி விதிப்பது ஆரோக்கியமான மக்களை உருவாக்குகிறது.
மதுபானத்திற்கு வரி விதிப்பதனால் வன்முறை மற்றும் வீதி போக்குவரத்து பாதிப்புகளைத் தடுக்க உதவுவதுடன் மதுபானங்கள் தொடர்ந்து மலிவு விலையில் விநியோகிப்பது கவலை அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 7 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
