மதுபானங்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும்: வலியுறுத்தும் உலக சுகாதார அமைப்பு
மதுபானங்கள் மற்றும் இனிப்பு பானங்கள் மீதான வரிகளை அதிகரிக்குமாறு உலக நாடுகளிடம் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
குறித்த வரி அதிகரிப்பினால் ஆரோக்கியமற்ற பொருட்கள் மீதான சராசரி உலகளாவிய வரி விகிதம் குறைவடைவதுடன் ஆரோக்கியமான மக்கள் தொகைக்கு வழிவகுக்கும்.
வரிகளை அதிகரிக்கும் செயற்பாடு
மது அருந்துவதால் ஆண்டுக்கு 26 இலட்சம் மக்கள் இறப்பதுடன் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வதால் 80 இலட்சத்துக்கு அதிகமானோர் இறக்கின்றனர்.
மதுபானங்கள், இனிப்பு பானங்கள் மீதான வரியை நடைமுறைப்படுத்துவது இந்த இறப்புகளின் வீதத்தை குறைக்கும்.

வரி விதிக்கும் செயற்பாட்டினால் குறித்த தயாரிப்புகளின் பயன்பாட்டைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான தயாரிப்புகளை உருவாக்க நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும்.
ஆரோக்கியமற்ற பொருட்களுக்கு வரி விதிப்பது ஆரோக்கியமான மக்களை உருவாக்குகிறது.

மதுபானத்திற்கு வரி விதிப்பதனால் வன்முறை மற்றும் வீதி போக்குவரத்து பாதிப்புகளைத் தடுக்க உதவுவதுடன் மதுபானங்கள் தொடர்ந்து மலிவு விலையில் விநியோகிப்பது கவலை அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam