துயர வரலாறொன்றின் நடமாடும் சாட்சியங்களின் கண்ணீர் சுமந்த கதைகள்! (VIDEO)
தமிழர்களின் சுயநிர்ணய இனவிடுதலைக்காக களமுனையில் இருந்து போராடிய எத்தனையோ முன்னாள் போராளிகளும், போராளி குடும்பங்களும் எம்மத்தியில் சொல்லண்ணா துயரங்களுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு நாட்டிற்காக போராடிய எத்தனையோ போராளிகள் இன்று வறுமையின் பிடியில் சிக்கி நாளுக்கு நாள் போராட்டத்துடன் தனது வாழ் நாளை கழித்து வருகின்றனர்.
வறுமை எந்த அளவுக்கு கொடுமையானது என்பது ஏழைகளாக பிறந்து வளர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து உணர்ந்தவர்களுக்கே தெரியும். அவ்வாறான குடும்பங்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் உண்டு.
இப்படி வறுமையில் வாழும் இவர்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
இவ்வாறு வலி சுமந்த சில குடும்பங்களின் துயரங்களுடன் நாம் இதுவரை கடந்து வந்த பாதையை தாங்கி வருகிறது எமது ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சியின் விசேட தொகுப்பு,
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் உதவும் உள்ளம் கொண்டவர்கள் உங்கள் ஆதரவு கரங்களை நீட்டலாம்.. WhatsApp / Viber - +94767776363 / +94212030600
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் விசாலாட்சியா இது?... Frock போட்டு அவர் வெளியிட்ட போட்டோ Cineulagam