மீண்டும் மிகப் பெரிய கொரோனா அலைகள் ஏற்படலாம்: எச்சரிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்
நோய் அறிகுறிகள் தென்படாத கொரோனா தொற்றாளர்களை சமூகத்தில் அதிகளவில் அடையாளம் காண முடிந்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் மீண்டும் ஒரு முறை கீழ் மட்டத்தில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது அதிகரிப்பை காட்டுவதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன(Upul rohana)கூறியுள்ளார்.
இந்த நிலைமை காரணமாக மிக விரைவில் சாதாரண மக்கள் மத்தியில் அங்காங்கே கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் மக்கள் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றாத நிலைமையை காணக் கூடியதாக உள்ளது.
இந்த நிலைமை தொடர்ந்தால், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சிரமமான மட்டத்திற்கு மிகப் பெரிய கொரோனா அலைகள் ஏற்படக் கூடும் எனவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
