மட்டக்களப்பில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டம்
மட்டக்களப்பில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவை ஊழியர்கள் தம்மை பொலிஸ் அடிமையில் இருந்து விடுவிக்குமாறும், வழங்கப்பட்டுவரும் மாதாந்த சம்பளத்தை உயர்த்தி தருமாறும், பணியை நிரந்தரமாக்குமாறு கோரிபணி புறக்கணிப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (26.02.2024) இரண்டாவது நாளாகவும் மட்டு தொடருந்து நிலையத்தின் முன்னால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஊழியர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எங்களை பொலிஸார் அடிமைகளாக நடாத்துகின்றனர். நாங்கள் கடந்த 10 வருடத்துக்கு
மேலாக இந்த பாதுகாப்பற்ற கடவை ஊழியர்களாக கடமையாற்றி வருகின்றோம்.
இதில் மாதம் 31 நாளும் வேலை செய்தால் 7 ஆயிரத்து 500 ரூபா ஒருநாள் விடுமுறை எடுத்தல் சம்பளத்தில் 500 ரூபாவை வெட்டுவார்கள் தினமும் காலையில் இருற்து இரவு வரை கடமையில் இருக்கவேண்டும்.
அங்கு கடவை கேற்றுக்கள் கூட சீரானது இல்லை நாங்கள் அங்கு இருப்பதற்கு கூட சீரான கொட்டகையில்லை. மழையிலும் வெய்யிலிலும் பல்வேறு அளெகரியங்கள் மத்தியில் வேலை செய்துவருகின்றோம்.
இந்த நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் மாதாந்தம் குடும்பம் ஒன்றின் செலவுக்கு 35 ஆயிரம் ரூபா தேவையான நிலையில் 8 மணிநேர வேலைக்கு நாள் ஒன்றிற்கு 250 ரூபா 31 நாள்வேலை இந்த சம்பளத்துடன் எவ்வாறு வாழமுடியம். எனவே இந்த வேலையை விட்டு நாங்கள் விலகிசெல்வதாக இருந்தால் இந்த சம்பளத்திற்கு ஒருவரை தந்து விட்டு செல்லுமாறு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனவே வேலையை விட்டு போகவும் முடியாது சம்பளத்தை கூட்டியும் தராமல் பொலிஸார் எங்களை அடிமைகளாக நடாத்துகின்றனர். அரசியல்வாதிகளிடம் முறையிட்டோம் அதற்கு கூட எதுவிதமான தீர்வும் இல்லை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டு கருவப்பங்கேணி தொடருந்து தண்டவாளத்தில் தொடருந்துடன் மோதி ஒருவர் உயிரிழந்தார் ஒருவரின் உயிர் வெறும் 250 ரூபாவா? எனவே எங்களுக்கு தீர்வு தரும்வரை இந்த போராடம் தொடரும் என கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
