யாழிலிருந்து அரச உத்தியோகத்தர்களை ஏற்றி சென்ற பேருந்து வழிமறிக்கப்பட்டமையால் அமைதியின்மை (photos)
யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைதீவுக்கு அரச உத்தியோகத்தர்களை ஏற்றி சென்ற பேருந்து, பரந்தன் சந்தி பகுதியில் தனியார் போக்குவரத்து சங்கத்தினரால் இடைமறிக்கப்பட்டதால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று (27.01.2023) இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சேவையாற்றுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்காக போக்குவரத்து சேவை வழங்கப்பட்டுள்ளது.

அரச பேருந்து வழி மறிப்பு
எனவே வழமை போன்று யாழ்ப்பாணத்தை சேர்ந்த அரச உத்தியோகத்தர்களை இன்று காலை ஏற்றி வந்த அரச பேருந்தே இவ்வாறு வழி மறிக்கப்பட்டுள்ளது.
கடமைகளுக்கு செல்லும் அரச உத்தியோகத்தர்கள் இந்த சம்பவத்தின்போது நீண்ட நேரம் தடுத்து நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவர் கைது
சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விரைந்து வந்தமையால் நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பேருந்து சேவை தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் எவ்வித முறைப்பாடுகளும்
செய்யப்படாது, இவ்வாறு பேருந்துகளை வழி மறைப்பது சட்டத்துக்கு புறம்பானது
என தெரிவித்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேரை பொலிஸார் கைது
செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri