தேர்தலை எதிர்கொள்வதற்கு மொட்டுக் கட்சி ஒருபோதும் பின்வாங்காது: கோகிலா ஹர்சனி
தேர்தலை எதிர்கொள்வதற்கு மொட்டுக்கட்சி ஒருபோதும் பின்வாங்காது, மொட்டுக்கட்சியிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்குத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்சனி குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (16.02.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்த வாக்குகளை வைத்துக்கொண்டு வெற்றி பெற்ற தரப்பினர் இன்று எதிர்க்கட்சிகளில் இருந்து கொண்டு செயற்படுவதால் அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை எந்தவிதத்திலும் பாதிக்காது.
அரசியல் நடவடிக்கைகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெண்கள் முன்னணி என்ற முறையில் எதிர்வரும் வாரங்களில் நாடளாவிய ரீதியில் சம்மேளனத்தை நடத்துவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.
கட்சி என்ற முறையில் எமது அரசியல் நடவடிக்கைகளை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்துக்கொண்டு செல்கின்றோம்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். எந்தத் தேர்தலையும் வெற்றி கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன எப்போதும் தயாராகவே இருக்கின்றது.
யார் எதனைக் கூறினாலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் அஞ்சாது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாம் பாரிய தோல்வியைச் சந்திப்போம் என்று அனைவரும் கூறினர். எனினும், அந்தத் தேர்தலிலும் நாம் பாரிய வெற்றியைப் பெற்றோம்.
அதேபோன்று இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் பாரிய வெற்றியைப் பெறுவோம். நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்பவற்றை எதிர்கொள்வதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம்.
அதற்காகக் கிராமங்களில் உள்ள மக்கள் தயாராகவே இருக்கின்றனர். இந்த நாட்டுக்குச் சேவையாற்றியவர்கள் யார், சேவையாற்றாதவர்கள் யார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவர்.
ஹெலிஹொப்டர் சின்னத்தில் இருப்பவர்களும் ஏனைய எதிர்க்கட்சியில் இருப்பவர்களும் எமது கட்சியிலேயே கடந்த முறை போட்டியிட்டார்கள்.
இம்முறை உள்ளூராட்சி சபைத்
தேர்தலில் மக்கள் அவர்களுக்கு நன்கு பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? Cineulagam

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் இந்தியாவில் தயாரிப்பு News Lankasri
