ஐ.தே.கவை அழிக்க இடமளியோம்! ரவி கருணாநாயக்க எம்.பி. திட்டவட்டம்
ஐக்கிய தேசியக் கட்சியை ஒரு சிலர் பணயக் கைதியாகப் பயன்படுத்த முற்படுகின்றனர். எனினும், கட்சியை அழிப்பதற்கு இடமளிக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியை அழிக்க இடமளிக்க முடியாது
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்தபடியாக ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர் நான்தான். எனவே, ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைக்காகக் கட்சியை அழிக்க இடமளிக்க முடியாது.

மக்களின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்க வேண்டும். கட்சியை விட்டுச் சென்றவர்களும் மீள வரவேண்டும். ஒரு சிலருக்காக எமது கட்சியைப் பணயக் கைதியாகப் பயன்படுத்த இடமளிக்க முடியாது.
இந்த நாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திய கட்சியே ஐக்கிய தேசியக் கட்சியாகும். அக்கட்சியை பழைய நிலைமைக்குக் கொண்டுவர வேண்டும் என குறிப்பிட்டள்ளார்.
பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
சீனாவின் நாய் ரோபோ to கொரியாவின் ட்ரோன்: இந்தியாவுக்கு AI மாநாட்டில் ஏற்பட்டுள்ள அவமானம் News Lankasri
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam