ரணில் - சஜித் இணைவது தொடர்பாக முஜிபுர் ரஹ்மானின் கருத்து
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் இணைய வாய்பப்பில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இணையவுள்ளதாக சிலர் கூறுகின்றனர்.
இது உண்மைக்குப் புறம்பானது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் முன்னிலையில் இருப்பதால் அத்தகைய இணக்கம் அவசியமில்லை எனவும் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.
தோற்றத்தில் மாற்றம்
ஜனாதிபதி விக்ரமசிங்க சில நபர்களால், அவரது தோற்றத்தை மாற்றும் அளவிற்கு கூட மாற்றப்பட்டு வருகிறார்.
அவர் அண்மைக் காலமாக வித்தியாசமான ஆடைகளை அணியத் தொடங்கியுள்ளார். இது ஆச்சரியமாக இருக்கிறது என்று முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
